Saturday, February 28, 2009

கிழிக்க படாத பக்கங்கள்


இலைகள் உறசாடி குளிர் காற்று வீசும் இரவிலே
என் பேருந்து அந்த காற்றை கிழித்துக்கொண்டு பறந்து கொண்டிருந்தது
உடம்பில் சில சில்லென்று நீர்த்துளிகள் ஜன்னலோரமாய் வந்து தீண்டியது
எங்கோ சில தேனிசை ராகங்கள் காதோரமாய் வந்து ரீங்காரமிட்டு
கொண்டிருக்க கண்ணை அசர செய்தது
மனம் சில சுவையான நினைவுகளை சுமந்து கொண்டு அசை போட
தொடங்கியது ஏதோ ஒரு பழைய புத்தகத்தின் மூவாயிரத்து அறுபத்தி ஐந்தாம் பக்கத்தின் நினைவுகளை கொண்டு வந்து என் கண் முன் காட்டியது
இதோ இப்பொழுது எனக்கு எட்டு வயது, என் சிறு நண்பர்களோடு

பொழுதாகிய பின் கண்ணாமூச்சி விளையாடுகிறேன் கவலையே இல்லாத நேரங்கள் எத்தனை சந்தோஷம் எத்தனை ஆர்பாட்டம்
கண்ணை கட்டி , கட்டி பிடித்து , உருண்டு பிரண்டு , நீர் தெளித்து , சிரிப்பு மூட்டி , அணைத்து கொண்டு
மழையில் நனைந்து கொண்டு , ஓடி கொண்டு , மறைந்து கொண்டு , சிரித்து கொண்டு , எல்லாம் என் தோழியோடு சேர்ந்து கொண்டு
இத்தனை ஆற்பாட்டம்
இதோ என் தோழி என் கைப்பிடித்து கொண்டே விளையாடுகிறாள் , அவளது கை பிடியின் அழுத்தத்தில்
எத்தனை ஆறுதல்கள் , அவளோடு எத்தனை தோழமை , அவளுக்குள் எத்தனை நம்பிக்கை

காலங்கள் எவ்வளவு வேகமாய் ஓடியது , அவளுடைய தந்தை காலமான போது,
அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை , தெரியவில்லை
அதற்குபின் அவளை பார்க்கவும் முடியவில்லை ...
வயதுக்கு வந்து விட்டாளாம் ஆண் நண்பர்களோடு பழக கூடாதாம்
அவரவர்களின் கடமைகள் நினைவுகளை மறக்கடிக்க செய்தது
இதோ நான் பிரிந்து செல்கிறேன் , என் கடமைகள் என்னை வேறாக பிடுங்கி எடுத்து கொண்டு செல்கிறது
பிரிவிலும் அவளை பார்க்க முடியவில்லை , ஏதோ ஞாபகங்களை சுமந்து கொண்டு செல்கிறேன்

யாரோ என் தோள்களை உலுக்க , அந்த நினைவுகள் களைந்து நிகழ் காலம்
" ஏங்க bus கொஞ்சம் நேரம் நிற்குமாம் வாங்க எதாச்சும் சாப்பிட்டு வரலாம் "

இது என்னவள் , எல்லா பிரிவுகளின் வேதனைகளை மறக்கடிக்க செய்தவள்
இனி என் முடிவு பயணம் வரை எனக்காக அவள்

ஆனாலும் சில கனவுகளின் ஓரங்களில் , என் கடந்த கால பக்கங்களில் அந்த சிறு ஞாபகங்களில் அவள்
இன்னமும் இருக்கின்றாள் பக்கங்கள் கிழிக்க படாமல்

நலமாய் இருப்பாள் என நம்புகிறேன் !!!

Labels:

Tuesday, July 11, 2006

Love before marriage...




தென்றலாய் மிதந்து வந்த தேன் காற்றில் காதல் சொன்னாய்
சபை கூடிய கூட்டத்தில் கண்ணடித்து காதல் சொன்னாய்
சட்டென்று எனை பார்ததும் நாணத்தால் இமை குனிந்து காதல் சொன்னாய்
தூரத்தில் எனை கண்டதும் நெஞ்சம் வியர்த்து காதல் சொன்னாய்
கால்களால் கோலம் போட்டு காதல் சொன்னாய்
கவிதை பாடி காதல் சொன்னாய்

உன் விடுதி தோழிகளை எல்லாம் கூட்டி வைத்து நம் காதல் சொன்னாய்
காதலே வெறுக்குமளவுக்கு காதல் சொன்னாய்..

இன்னும் சில தினங்களில் நமக்கு கெட்டி மேளம் உங்கள் ஊரில்..
ஆனால் இன்னமும் உன்னை உணரவில்லை…
ஊருக்கு வழி அனுப்ப நான் உன்னுடன்…
உன் கண்கள் பனித்து கை அசைத்து காதல் சொல்கிறாய்…


இதோ உன் ஒவ்வொரு நீர் துளியும் உன் காதலை என்னுள் ஆழமாய் இறக்குகிறதே……
வலித்ததடி என்னுள் வெகு ஆழத்துக்குள் உன் சிறு பிரிவு….
என்னை தனியே விட்டு சிரு பொட்டாய் மறைந்து சென்று இருக்கிறாய்…

சொல்ல காத்திருக்கின்றேன் என் உயிர் நீதான் என்று நம் மண மேடையில்…






Tuesday, July 04, 2006

அந்த ஒரு சொல்..


க்ரீஈஈங் என அலாரம் மணியாய் 5 மணிக்கு எழுப்பியது என் Cellphone Sunday இல்.

'There is a critical job abend in production, Can you please look at it' என என் Manager.
'Yes I will start in 15 mts' என எரிச்சலாய் மனதுக்குள்.

அரை குறை உறக்கத்தோடு பாதி மயக்கத்தோடு டூத் ப்ரஷ் தன் வேலையை ஆரம்பித்தது...

ஐஸ் கட்டி மழையாய் ஷவர் எரிச்சலூட்டி தூரலாய் மாறியது..
'அம்மா சீக்கிரம் மோட்டார் போடுங்கம்மா'


சோப்பை கரைக்க முடியாமல் காக்கை குளியல்.
தலையில் ஏதோ ஒட்டி கொண்டு இருப்பதை காய வைக்க மின் விசிரி Olympic ஓட்டம்...
அறைகுறையாய் வெந்தவாறு பசையாய் இட்லி..
'உங்களுக்கு Time ஆகலயா சீக்கிரம் சீக்கிரம்' விரட்டியவாறு என் ஆத்துகாரி வேறு
சட்டையில் ஆயிரம் மடிப்பு வர மாட்டியவாறு..ஜெட் வேகத்தில் என் அதரகாலத்து 'புகை' வண்டியில்

'என்ன Sir இவ்ளோ சீக்கிரம்? ' நக்கலாய் Security
Seat ற்க்குள் வருவதர்க்குள் ஒரு நாலைந்து தடவை 'Manager Calling ...Manager Calling..' Cellphone நெருப்பில் எண்னை ஊற்றியது
கண் சிமிட்டியபடி என் கணிணி காலை தூக்கத்திலிருந்து அவசர அவசரமாய் எழும்பியது..
'டேய் உனக்கு நேரம் காலமே கிடயாதா' எரிச்சலாய் அது தன் மனதுக்குள்
அதன் மனதினை புரிந்து கொண்டு வந்த எரிச்சலையெல்லாம் அதன் Keyboard ஐ அடித்தவாரு ஆரம்பித்தேன் என் வேலையை...
மறுபடியும் 'Manager calling ...Manager calling' என் Cellphone படு நக்கலாய்
'இருயா வரேன்..'

'I have started my task, I will be finishing it soon !!'

OK Get Set Gooooooooooooo !!!

Keyboard ஐ அடித்து ஒடித்து...எகிறி குதித்து
தலையை பிய்த்து...முட்டி மோதி..
வேலையை முடித்து பார்த்தால் மணி 7.. அட Evening 7 பா...

ஏதோ! ஏதோ மறந்துட்டேனே !...ஏதோ மறந்துட்டேனே !...
அட ஆமாம் Lunch..சாப்பிட்டேனா ???

சரி ஏதோ ஒண்ணு வேலையை ஒழுங்காய் முடித்தேனே என திருப்த்தியில் என் வண்டி வந்த பாதையில்

மறுபடியும் 'Manager calling....Manager calling...' அட நிறுத்த மாட்டியா நீ
'Some other job has abended...' Manager ஒரு Psycho சிரிப்பாய்
Cellphone ஐ இதற்க்கு அப்புறம் Switch off செய்வதென்று புரிந்து கொண்டேன்

மறுபடியும் Repeat steps from 1 by 1 until எனக்கு பைத்தியம் பிடிக்க...

கடைசியில் ஏதொ ஒரு வழியாய் என் வீட்டில் மறுபடியும் நான்..?
வலிகளை சுமந்தவாறு மனது, ஆறுதலாய் என் துணைவி..
நாம Life ல நிறைய விஷயங்கள் Miss பண்ரோம்ல..
ஏனொ மலை போல் அழுத்தங்கள் ... தாங்க முடியாமல் கண்கள் பனிக்க..

இவை எல்லாவற்றையும் ஒரு நொடியில் மறக்கும் அந்த ஒரு சொல்..



'ஐ அப்பா வந்தாச்சு !!'

Friday, June 23, 2006

இனி நானும் அவளும் !!!
















கடற்கரை ஜோடி, கொரிக்கும் கடலை
Hero Honda Bike, கட்டிப்பிடித்தபடி இடுப்பு

சீக்கிரமாக வீடு, சுட சுட Coffee
வைகை Restaurant, Mysore போன்டா

Spencer plaza, புது புது ட்ரெஸ்ஸ்
ஜோராக மழை, ஜோடியாக குடைக்குள்

சந்த்ரமுகி Cinema, கடைசி சீட்டில் வேரு Cinema
கன்னம் வருடும் கைகள், போர்வைக்குள் Company

GRT தங்க மாளிகை, கொலுசு வாங்க காரணம்
104 டீகீரி ஜுரம், நெற்றியில் கை வைத்து தெர்மொமீட்டர்

இந்த கனவுகள் எல்லாம் நிஜமாக்க இனி நானும் அவளும் !!!

என் செல்ல ஆண்டவா !!















ஒன்று இரண்டு என்று எண்ண முடியுமா உன் ஆசீர்வாதங்கள் என் செல்ல ஆண்டவா !
இல்லை சத்தமில்லாமல் அதனை மறக்கத்தான் முடியுமா என் அருமை நண்பா !

என் சின்ன காயங்களை வலிக்காமல் ஆற்ற வின்னுலகில் இருந்து எனக்காய் பிறந்தாயோ
நான் தவறு செய்தால் செல்லமாய் கண்டிக்க என் கூடவே இருந்தாயோ

உன்னை மறந்து எனக்காக வாழ என் மனசு கேக்குமா கொஞ்சம் சொல்லு !
உன்னை அப்படி மறந்து தான் இருக்க முடியுமா நீயே சொல்லு !

வெளியெ விழுந்த கண்ணீரை துடைக்க என் துணைவி இருக்க
உள்ளே அழுது காய்ந்து போன கண்ணீரை துடைக்க நீதானே இருக்க

காசு வேண்டா, பதவி வேண்டா இவ்வுலகத்தில் எந்தபொருளையும் தர வேண்டா, உன் காலடி இடம் பொதும்!!

என் குட்டி இதயத்தில் எத்தனை நசுக்கல்கள்

அதில் வழிந்த ரத்தத்தில் எத்தனை பிசுக்கல்கள்
இவை எல்லாம் என்னால் தாங்க முடியவில்லயே

என்று உன்னால் பொறுக்கமுடியலயோ...

நெஞ்சு கனக்கும்போது என்னை கொஞ்சி கொஞ்சி அழைத்தாயே...

விழி பிதுங்கி பாரம் நசுக்கும்பொது அதனை லேசாய் எடுத்தாயே....

இனி எனக்காக என்ன இருக்கு...உனக்காக வாழ மட்டும் வரம் கொடு.....